கேள்வி 6 : அண்டைவீட்டாருடன் நடந்துகொள்ள வேண்டிய ஒழுங்குகள் யாவை ?

பதில் :1- சொல்லாலும் செயலாலும் அண்டை வீட்டாருடன் அழகிய முறையில் நடந்து கொள்வேன். எனது உதவி அவருக்கு தேவைப்பட்டால் அவருக்கு உதவிசெய்வேன்.

2- பெருநாள் மற்றும் திருமணம் அல்லது இது போன்ற மகிழ்சியான சந்தர்ப்பங்களில் அவருக்கு வாழ்த்துவேன்.

3- அவர் சுகயீனமுற்றிருந்தால் நோய்விசாரிக்கச் செல்வேன். துன்பம் ஏற்பட்டால் அவருக்கு ஆர்தல் கூறுவேன்.

4- நான் சமைத்த உணவில் எனக்கு முடியுமானதை அவருக்கு வழங்குவேன்.

5- சொல்லாலோ, செயலாலோ அவர் அசௌகரியப்டும் விதத்தில் நடந்து கொள்ளமாட்டேன்.

6- மிக சப்தமாக பேசி அவரை தொந்தரவு செய்யமாட்டேன், அத்துடன் அவரின் குறைகளை துருவித்துருவி தேட மாட்டேன், அவரின் விடயத்தில் சகிப்புடன் நடந்து கொள்வேன்.