பதில் : நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கிறார்கள் : யார் அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் அவனை நிராகரித்து விட்டார். அல்லது அவனுக்கு இணைவைத்துவிட்டார்'. (ஆதாரம் : திர்மிதி).
இந்த ஹதீஸிலிருந்து பெறப்படும் பயன்கள் :
1- அல்லாஹ்வைத் தவிர வேறு எவற்றிலும் சத்தியம் செய்வது கூடாது.
2- அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்வது சிறிய வகை ஷிர்க்காகும்.
நபிமொழி -6