கேள்வி 5 (மன் ஹலப பிகய்ரில்லாஹ்) என்ற ஹதீஸை முழுமையாக எழுதி அதன் சில பயன்களையும் தருக?

பதில் : நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கிறார்கள் : யார் அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் அவனை நிராகரித்து விட்டார். அல்லது அவனுக்கு இணைவைத்துவிட்டார்'. (ஆதாரம் : திர்மிதி).

இந்த ஹதீஸிலிருந்து பெறப்படும் பயன்கள் :

1- அல்லாஹ்வைத் தவிர வேறு எவற்றிலும் சத்தியம் செய்வது கூடாது.

2- அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்வது சிறிய வகை ஷிர்க்காகும்.

நபிமொழி -6