கேள்வி: ஸூறா காரிஆவை ஓதி அதற்கான விளக்கத்தைத் கூறுக?

பதில்: ஸூறதுல் காரிஆவும் அதன் விளக்கவுரையும் :

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

1. அல்காரிஅஹ். 2. மல்காரிஅஹ். 3. வமா அத்ராக மல்காரிஅஹ். 4. யவ்ம யகூனுன்னாஸு கல்பராஷில் மப்ஸூஸ். 5. வதகூனுல் ஜிபாளு கல்இஹ்னில் மன்பூஷ். 6. பஅம்மா மன் ஸகுலத் மவாணுஸீனுஹு. 7. பஹுவ பீ ஈஷதிர் ராழியா. 8. வஅம்மா மன் கப்பத் மவாஸீனுஹூ. 9. பஉம்முஹூ ஹாவியா. 10. வமா அமத்ராக மாஹியஃ. 11. நாருன் ஹாமியஃ. ஸூறதுல் காரிஆஃ 1-11

விளக்கவுரை (தப்ஸீர்) :

1- (திடுக்கிடச் செய்யும் பயங்கர நிகழ்வு!) கருத்து : உள்ளங்களை திடுக்கிடச்செய்யக்கூடிய மிகவும் பயங்கரங்கள் நிறைந்த நாளை குறிக்கிறது.

2- (திடுக்கிடச் செய்யும் பயங்கர நிகழ்வு என்றால் என்ன?) கருத்து : அதாவது உள்ளங்களை திடுக்கிடச்செய்யக்கூடிய மிகவும் பயங்கரங்கள் நிறைந்த நாள் என்றால் என்ன?.

3- (அந்தப் பயங்கர நிகழ்வு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?) கருத்து: நபியே மக்களின் உள்ளங்களை திடுக்கிடச் செய்யக்கூடிய மிகவும் பயங்கரங்கள் நிறைந்த நாள் பற்றி அறிவித்தது எது?! அது தான் மறுமை நாள்,

4- (அந்நாளில், மக்கள் சிதறிக்கிடக்கும் ஈசல்கள் போன்று ஆகிவிடுவார்கள்). கருத்து : மக்களின் உள்ளங்களை திடுக்கிடச்செய்யும் அந்நாளில் மக்களெல்லாம அங்கும் இங்கும் சிதரிய ஈசல்கள் போன்றிருப்பார்கள்.

5- (மலைகள் கடையப்பட்ட கம்பளி போன்று ஆகிவிடும்!) கருத்து : அதாவது மலைகள் அவற்றின் மெதுவான நகர்வு மற்றும் இயக்கத்தில் கடையப்பட்ட கம்பளி போன்று மென்மையானதாக ஆகிவிடும்.

6- (யாரின் செயல்களது எடை அந்நாளில் கனத்துப் பாரமாக உள்ளதோ) . அதாவது யாரின் நன்மைகளின் எடை தீமையான காரியங்களின் எடையை விட அதிகரிக்கிறதோ

7- (அவர் திருப்திகரமான வாழ்வைப் பெறுவார்). கருத்து : அவர் சுவர்க்கத்தில் திருப்திகரமான வாழ்வை பெற்றுக்கொள்வார்.

8- (யாரின் செயல்களது எடை பாரமற்று இலேசாக இருக்குமோ) கருத்து : அதாவது எவரின் தீமையான காரியங்களின் எடை நல்லமல்களின் எடையை விட அதிகரிக்கிறதோ

9- (அவர் தங்குமிடம் 'ஹாவியா' எனும் பாதாளப் படுகுழியாகும்.) கருத்து : மறுமையில் அவரின் நிரந்தர தங்குமிடம் நரகமாகும்.

10- ( ஹாவியா எனும் அது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?) கருத்து : நபியே ஹாவியா என்றால் என்ன என்பது பற்றி உமக்குத் தெரியுமா?

11- (அது கடும் சூடான நெருப்பாகும்) கருத்து : அது கடும் வெப்பம் கொண்ட நரக நெருப்பாகும்.